
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் மூன்று இலட்சத்து இரண்டாயிரத்து 750பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை ஒரு கோடியே 58இலட்சத்து 20ஆயிரத்து 42பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 46ஆயிரத்து 530பேர் பாதிக்கப்பட்டதோடு, மூவாயிரத்து 19பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் 64இலட்சத்து 85ஆயிரத்து 289பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 27ஆயிரத்து 324பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் இதுவரை 95இலட்சத்து ஏழாயிரத்து 419பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.