
மேஷராசி அன்பர்களே!
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்கள் தங்கள் பணிகளில் ஆலோசனை கேட்பார்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தியானித்து நாளைத் தொடங்க சிரமங்கள் குறையும்.
ரிஷபராசி அன்பர்களே!
வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். காஞ்சி வரதராஜ பெருமாளை தியானித்து வழிபட, காரியங்கள் அனுகூலமாகும்.
மிதுனராசி அன்பர்களே!
அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதக மாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். திருகடவூர் அபிராமி அம்பிகையை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
கடகராசி அன்பர்களே!
தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்களில் அனுகூலமாக முடியும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகப் பணிகளை முடிப்பதில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த் ததை விடவும் கூடுதலாக இருக்கும். திருச்சி தாயுமான சுவாமிகளை வழிபட்டு நாளைத் தொடங்க விருப்பங்கள் நிறைவேறும்.
சிம்மராசி அன்பர்களே!
உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். மாலையில் பிள்ளைகளுடன் விளையாடி மகிழ்வீர்கள். அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தபடியே உற்சாகமாக முடித்துவிடுவீர்கள். இன்று திருவொற்றியூர் வடிவுடை அம்மனை வழிபட எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.
கன்னிராசி அன்பர்களே!
மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும். காலையில் பணிச்சுமை அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும். திருத்தணி முருகப்பெருமானை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.
துலாராசி அன்பர்களே!
மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகப் பணிகளில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று மதுரை மீனாட்சி அம்மனை வழிபட மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விருச்சிகராசி அன்பர்களே!
எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். இன்று வைத்தீஸ்வரன்கோவில் செல்வமுத்துக்குமார சுவாமியை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தனுசுராசி அன்பர்களே!
உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். இன்று அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி நாளைத் தொடங்கிட அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படும்.
மகரராசி அன்பர்களே!
தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். அவசியத் தேவை இருந்தால் மட்டுமே தக்க முன்னேற்பாடுகளுடன் வெளியில் செல்லவும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். இன்று திருவரங்கம் நம்பெருமாளை தியானிப்பதன் மூலம் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.
கும்பராசி அன்பர்களே!
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளை களின் பிடிவாதப் போக்கு மாறி, அவர்கள் உங்கள் விருப்பப்படி செயல்படுவார்கள். சிலருக்கு அலுவலகப் பணி தொடர்பாக அதிகாரியிடம் ஆலோசனை கேட்க நேரிடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். நாகப்பட்டினம் சௌந்தரராஜ பெருமாளை வழிபட முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும்.
மீனராசி அன்பர்களே!
எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று திருவாரூர் தியாகராஜ பெருமானை வழிபட நன்மைகள் கூடுதலாக ஏற்படும்.