
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை
அனுபவித்து வந்த 6 பேரில் ஒருவரான நளினி ஸ்ரீஹரன், தமிழகத்தின் வேலூர்
சிறையில் இருந்து இன்று (12) விடுதலை செய்யப்பட்டார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி
உள்ளிட்ட 5 பேரை இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று (11) விடுதலை செய்தது.
குற்றவாளியாக இனங்காணப்பட்டு தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுவித்த அதன்
முந்தைய உத்தரவு அவர்களுக்கும் பொருந்தும் என்று அறுவரும்
விடுவிக்கப்பட்டனர்.
நான்கு இலங்கைப் பிரஜைகள் உட்பட ஆறு பேரையும் விடுதலை செய்வதற்கான உச்ச
நீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்களை விடுதலை
செய்வதற்கான நடவடிக்கையை சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்தனர்.
நளினியின் கணவர் வி. ஸ்ரீஹரன் என்கிற முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ்
மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையர்கள் என்பதுடன், நளினி மற்றும்
ஆர்.பி.ரவிச்சந்திரன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.