
வியட்நாம் கடற்பரப்பில் காப்பாற்றப்பட்ட 303 இலங்கையர்களையும் ஐக்கியநாடுகள் சபையிடம் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியகூட்டமைப்பு கோரியுள்ளது.குறித்த 303 பேரையும் அவர்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதிஇடம் நாடாளுமன்றஉறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இன்று நாடாளுமன்றில் கோரிக்கைவிடுத்தார்.இந்த 303 பேரில் 264 ஆண்களும் 19 பெண்களும், 20 சிறுவர்களும் அடங்குவதாகசர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.