
மேஷராசி அன்பர்களே!
எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதில் சில தடைகள் ஏற்படும். வியாபாரத்தில் சுணக்கம் காணப்ப்டும். மனதில் காஞ்சி காமாட்சி அம்மனை தியானித்து வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.
ரிஷபராசி அன்பர்களே!
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளை உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் நன்றாக ஒத்துழைப்பார்கள். திருஇந்தளூர் பரிமள ரங்கநாதரை மனதில் நினைத்து வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கப் பெறலாம்.
மிதுனராசி அன்பர்களே!
இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தபடியே குறித்த நேரத்துக்குள் முடிப்பதுடன் சக ஊழியர்கள் தொடர்பு கொண்டு கேட்கும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய லாபம் வந்துசேரும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். திருக்கடவூர் காலசம்ஹார மூர்த்தியை தியானித்து வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.
கடகராசி அன்பர்களே!
இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். தாய் வழி உறவுகளால் நன்மை உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். அலுவலகப் பணிச்சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனை நடப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். திருப்பதி கோவிந்தராஜ பெருமாளை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
சிம்மராசி அன்பர்களே!
தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை வீட்டிலேயே நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி சிறிது சங்கடத்தை ஏற்படுத்தினாலும் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று பட்டீஸ்வரம் துர்கையை மனதில் நினைத்து வழிபட காரியங்களை வெற்றிகரமாக முடித்துவிட முடியும்.
கன்னிராசி அன்பர்களே!
தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை சாமர்த்தியமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். இன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை தியானித்து வழிபடுவது நலம் தரும்.
துலாராசி அன்பர்களே!
உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்தினருடன் விளையாடி மகிழ்வீர்கள். அலுவலகப் பணிகளை விரைவாக முடித்து அனுப்பிவிடுவீர்கள். வியாபாரத்தில் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். இன்று சிதம்பரம் ஆதிமூலநாதரை தியானிப்பதன் மூலம் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விருச்சிகராசி அன்பர்களே!
தெய்வ அனுகிரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருந்தாலும், பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும். இன்று மயிலாப்பூர் மாதவ பெருமாளை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.
தனுசுராசி அன்பர்களே!
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி ஏற்படும். அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டவும் செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும். இன்று மதுரை சோமசுந்தரப் பெருமானை வழிபடுவதனால் நற்பலன்கள் கூடுதலாகும்.
மகரராசி அன்பர்களே!
எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பிள்ளைகள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. மாலையில் நண்பர்கள் மூலம் உற்சாகமூட்டும் செய்தி ஒன்று கேட்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவும் ஒத்துழைப்பும் தருவார். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். இன்று நீங்கள் தியானித்து வழிபடவேண்டிய தெய்வம் சென்னை காளிகாம்பாள்.
கும்பராசி அன்பர்களே!
தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வீட்டிலேயே இறைவழிபாடு செய்து மகிழ்வீர்கள். அலுவலகத்திலிருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி செல்பேசி மூலம் இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். இன்று திருவொற்றியூர் தியாகராஜ பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனராசி அன்பர்களே!
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். அலுவலகப் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் மயிலாடுதுறை அன்னை அபயாம்பிகையை மனதால் நினைத்து வழிபடுவதன் மூலம் கூடுதல் நன்மைகளைப் பெறலாம்.