நேற்று (23) மாலை இந்திய மீனவர்களின் 30 ட்ரோலர் படகுகள் நெடுந்தீவை
அண்மித்த இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளன.

இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை விரட்டியடித்ததாகவும் அவர்களது
வலைகளை சேதப்படுத்தியதாகவும் இந்திய ஊடகங்கள் இது தொடர்பாக செய்தி
வௌியிட்டிருந்தன.

இந்த குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்த கடற்படைப்
பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா, இந்திய ட்ரோலர் படகுகளை
திருப்பியனுப்புவதற்கு வழமையான நடைமுறையின் கீழ் நடவடிக்கை
எடுக்கப்பட்டதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்