
வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார இறையாண்மையை பாதுகாத்து மக்களைவாழவைக்கும் சவாலை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எதிர்கொள்ளும் என நிதிஇராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.கேகாலையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துகொண்டபோதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்ததாக நிதியமைச்சுஅறிவித்துள்ளது.வரவு செலவுத் திட்டம் இம்மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில்சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மொத்த செலவு 7 ஆயிரத்து 885 பில்லியன்ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.2022ஆம் ஆண்டின் மதிப்பிடப்பட்ட செலவீனத்துடன் ஒப்பிடுகையில் இதுஆயிரத்து 785 பில்லியன் ரூபாய் அதிகரிப்பு எனவும் ரஞ்சித்சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.