200 மில்லியன் டொலரை செப்டம்பருக்குள் இலங்கை திருப்பிச் செலுத்தும் – பங்களாதேஷ்

200 மில்லியன் டொலர் கடனை எதிர்வரும் செப்டம்பருக்குள் இலங்கை திருப்பிச்
செலுத்தும் என எதிர்பார்ப்பதாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்
தெரிவித்துள்ளார்.

இலங்கை படிப்படியாக முன்னேறி வருகின்ற இந்தநிலையில் கடனைத் திருப்பிச்
செலுத்துவதற்கு செப்டம்பர் வரையில், அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என அவர்
குறிப்பிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர் கடனை கடந்த மார்ச்
மாதம் இலங்கை திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும்.

எனினும், இலங்கை மேலும் கால அவகாசம் கோரியதை அடுத்தே பங்களாதேஷ் மத்திய
வங்கி இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசம் வழங்கியமை
குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்