
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான சட்டமூலம் மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவையில் 21 ஆவது திருத்தச்சட்டமூல வரைபு முன்வைக்கப்பட்ட நிலையில் மேலும் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டது.
மேலும், இது தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து அனைத்து தரப்பினருக்கும் இடையில் பொது இணக்கப்பாடும் எட்டப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் வாராந்த அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைபை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.