13ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட அதிகாரப்பகிர்வு தொடர்பில் விசே அறிவிப்பினை வெளியிடுகின்றார் ஜனாதிபதி

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட அதிகாரப்பகிர்வு
தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை
வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

9ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி
முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மட்டுமே இடம்பெறும்.

இந்த உரையின் போதே 13 ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட அதிகாரப்பகிர்வு
சம்பந்தமாகவும் ஜனாதிபதி கருத்து வெளியிடவுள்ளார் என கூறப்படுகின்றது.

சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்ட கருத்துகள் உள்ளிட்ட
விடயங்களை அடிப்படையாக வைத்தே ஜனாதிபதியின் உரை அமையும் என
தெரியவருகின்றது.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த
வேண்டியது தனது கடப்பாடாகும் என ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார்.

அரசமைப்பில் உள்ள விடயத்தை தன்னால் மீற முடியாது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்