13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது – விமல்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு
ஒருபோதும் இடமளிக்க முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு
கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

13 ஐ முழுமையாக அமுலாக்க இடமளிக்கமாட்டோம். அதனை தோற்கடிக்க எல்லா
வழிகளிலும் போராடுவோம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்