
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 294 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதன்போது ஆட்டநேர முடிவில், வொஷிங்டன் சுந்தர் 60 ஓட்டங்களுடனும், அக்ஸர் பட்டேல் 11 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுககையில், இந்தியா அணி, 89 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
அஹமதாபாத் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பென் ஸ்டோக்ஸ் 55 ஓட்டங்களையும் டேனியல் லோரன்ஸ் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அக்ஸர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 294 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 101 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜெக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இன்னமும் 3 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தை, இந்தியா அணி நாளை தொடரவுள்ளது.