வைட் வோஷில் இருந்து தப்பியது இலங்கை அணி

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான 5 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

மெல்போனில் இடம்பெற்ற இப்போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியை அடுத்து வைட் வோஷில் இருந்து இலங்கை அணி தப்பியுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் மத்தியூ வேட் ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க பந்துவீச்சில் சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனை அடுத்து 155 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஆவது ஓவரில் ஒரு பந்து மீதமிருக்க 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பாக குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களை பெற்றுகொடுத்த அதேவேளை அணி தலைவர் தசுன் ஷனக 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸும் தொடரின் சிறப்பாட்டக்காரராக கிளென் மக்ஸ்வெலும் தெரிவுசெய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்