விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

நெல்லைக் கொள்வனவு செய்வதில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நிதிப் பற்றாக்குறை கிடையாது என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களில் இவ்வாறான பிரச்சினை இருந்து வந்தது. தற்போது அவை தீர்க்கப்பட்டுள்ளன.

ஆகக்கூடிய விலைக்கு விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் ஆற்றல் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு உண்டு என்று விவசாய அமைச்சுதெரிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்