
வவுனியா – சாளம்பைகுளம் பகுதியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகிய குடும்பப் பெண் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மாலை வீட்டில் இருந்த சமயம் அவரது கணவரின் உறவினர் கத்தியால் அவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் படுகாயமடைந்த பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.