
வருமான வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக பாராளுமன்ற
சுற்றுவட்டத்திற்கு அருகில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட
பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அசாதாரண வரி அறவீட்டை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தா விட்டால் அனைத்து
தொழிற்சங்கங்களுடனும் இணைந்து பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என
தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அரச பல் வைத்தியர்கள் சங்கம்,
பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், மருத்தவ பீட ஆசிரியர்கள் சங்கம்,இலங்கை
மின்சார பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களின் பிரதிநிதிகள்
நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்த எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் வீதியோரத்தில் குறித்த
சட்டமூலத்திற்கு எதிராக வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு
அமைதியான வகையில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.