வடகிழக்கைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் இங்கிலாந்திற்கு பயணம்

நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப்போட்டியில் மூன்று மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். 

அவர்களில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியை சேர்ந்த இரு மாணவர்களான செல்வன். யசோதரன் மிதுலாஷன், செல்வன். உதயாரன் கோஷிகன் மற்றும்  கிளிநொச்சி  மத்திய மகா வித்தியாலய மாணவனான செல்வன். சுகந்தன் சாகித்தியன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நாளை சனிக்கிழமை (25) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழாவில் பங்குபற்றுவதற்காக விமானம் மூலம் இங்கிலாந்து சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்