ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 6 பேரை விடுதலைசெய்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி மற்றும் ஆர்.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருக்கிறது.இதன்படி, நளினி, ஜெயக்குமார், ஆர்.பி.ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சுதேந்திரராஜா, ஸ்ரீஹரன் ஆகியோர் விடுவிக்கப்படுகின்றனர்.இன்று மாலை நிலவரப்படி நளினி, ரவிச்சந்திரன் ஏற்கெனவே பரோலில் உள்ளனர். சாந்தன் மற்றும் முருகன் வேலூர் மத்திய சிறையில் உள்ளனர். ராபர்ட் பயஸ், ஜெயகுமார் சென்னை புழல் மத்திய சிறையில் உள்ளனர்.இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கடந்த மே 18ஆம் தேதி மற்றொரு கைதி பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு அளித்த தீர்ப்பின்படி, தற்போது அந்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் மேலும் ஆறு பேரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்