ரஷ்­யாவில் எரி­ம­லை உச்­சியை நோக்கி ஏறிக்­கொண்­டி­ருந்த 8 பேர் எரி­ம­லைக்குள் வீழ்ந்து உயி­ரி­ழப்பு

ரஷ்­யாவில் எரி­ம­லை­யொன்றின் உச்­சியை நோக்கி ஏறிக்­கொண்­டி­ருந்த 8 பேர் வீழ்ந்து உயி­ரி­ழந்­துள்­ளனர். கிலு­செவ்ஸ்­கயா சோப்கா எனும் எரி­ம­லையில் கடந்­த­வாரம் இச்­சம்­பவம் இம்­பெற்­றுள்­ளது.

ரஷ்­யாவின் கம்­செட்கா தீப­கற்­றத்தில் 160 இற்கும் அதி­க­மான எரி­ம­லைகள் உள்­ளன. அவற்றில் மிக உய­ர­மான எரி­மலை கிலு­செவ்ஸ்­கயா. இந்த உயரம் 4754 மீற்றர் (15,597 அடிகள்) ஆகும். ஆசிய, ஐரோப்­பிய நிலப்­ப­ரப்பில் செயற்­படும் நிலை­யி­லுள்ள மிக உய­ர­மான எரி­ம­லையும் இது­வாகும்.

1697 ஆம் ஆண்டு இந்த எரி­மலை வெடித்­தமை முதல் தட­வை­யாக பதி­வு ­செய்­யப்­பட்­டுள்­ளது.  தற்­போதும் இந்த எரி­மலை அடிக்­கடி வெடிப்­பது வழக்கம். 

இந்­நி­லையில், கடந்த வாரம் 12 பேர் கொண்ட ஒரு குழு­வினர் இந்த எரி­ம­லையின் உச்­சியை நோக்கி ஈடு­பட்­டி­ருந்­த­தனர். 2 வழி­காட்­டி­களும் இவர்­களில் அடங்­கி­யி­ருந்­தனர். 

இவர்­களில் ஒரு குழு­வினர் சுமார் 13,000 அடி உய­ரத்தில் ஏறி­கொண்­டி­ருந்­த­போது சறுக்கி வீழ்ந்­ததால் 8 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். 

எரி­ம­லையின் உச்­சி­யி­லி­ருந்து 1,600 அடி கீழே இச்­சம்­பவம் இம்­பெற்­றுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். 

குளிர் மிகுந்த கடு­மை­யான காற்று கார­ண­மாக மீட்பு நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மீட்புக் குழுவின் ஹெலி­கொப்டர் ஒன்றை தரை­யி­றக்­கு­வ­தற்கு இரு தட­வைகள் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்ட போதிலும் அம்­மு­யற்­சிகள் பல­ன­ளிக்­க­வில்லை என மீட்புக் குழு­வினர் தெரி­வித்­துள்­ளனர்.

இந்த மலை­யா­னது எரி­மலை பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளினால் ஆனவை. இம்மலையின் உயரமும், எரிமலை வெடிப்பும் அபாயமும் இதில் ஏறும் மலையேறிகளுக்கு ஆபத்தானவை என  அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்