ரஷ்யாவின்  எதிர்க்கட்சி தலைவருக்கு நஞ்சூ பருக்கப்பட்டுள்ளதாக   வைத்தியர்கள் தெரிவிப்பு

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவான்லியின் (Alexei Navalny) உடலில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் ஜெர்மனி வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அவரின் உடலில் நச்சுப் பொருளேதும் கலக்கவில்லை என இதற்கு முன்னர், நவான்லிக்கு சிகிச்சை வழங்கிய ரஷ்ய வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.

ரஷ்ய ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்து வரும் அலெக்ஸி நவான்லி, விமான நிலையத்தில் பருகிய தேநீரில் நச்சு கலந்திருக்கலாம் என நவால்னியின் ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நவான்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் எனினும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் பேர்லின் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

நச்சுப்பொருளினால் அவரின் நரம்புத் தொகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்