
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த ஆட்சேபனைகளை ஏற்று மனு நிராகரிக்கப்பட்டதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
வினிவிந்த பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.