ரஜினி மற்றும் ஷாருக்கான் சந்திந்து பேச்சு

பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவர் தற்பொழுது இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகும் ‘ஜவான்’ திரைப்படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். 

இதில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். 

இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வரும் ஷாருக்கான் படப்பிடிப்புக்காக சென்னை வந்துள்ளார். படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இதே ஸ்டுடியோவில் நடிகர் ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைபடத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திடீரென்று நேரில் சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பிற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்