யோஷித வெளிநாடு சென்றது எப்படி? விசாரணையை ஆரம்பிக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

அண்மைக்காலம் வரை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமை அதிகாரியாக
இருந்த யோஷித ராஜபக்ச தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை
ஆரம்பித்துள்ளது.

இலங்கை கடற்படையில் பணியாற்றிய போது வெளிநாட்டுப் பயிற்சிக்குத் தெரிவான
விதம் பற்றி இந்த விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது .
இதற்காக தேர்வு பணியில் ஈடுபட்டவர்கள் விசாரிக்கப்பட உள்ளனர்.

யோஷித ராஜபக்ச கலந்துகொண்ட முக்கிய வெளிநாட்டுப் பயிற்சிகளில் ஒன்று,
பிரித்தானியா கடற்படைக் கல்லூரியில் உள்ள பாடநெறியாகும், இது பிரித்தானிய
அரச கடற்படையின் நிறுவனமான டார்ட்மவுத் என குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்