யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்த அதிசயம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாயொருவர் தனது முதல் பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கட்டுவன் மேற்கு பகுதியைச் சேர்ந்த 30 வயதான கிருஷ்ண பவன் கீர்த்திகா என்ற பெண்ணே இவ்வாறு 4 குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

குழந்தை பிரசவத்திற்காக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

பிறந்த நான்கு குழந்தைகளும் வைத்தியர்களின் விசேட பராமரிப்பில்(இன்கியூபேட்டர்) பராமரிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தைகளும் தாயும் நலமாக இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

முகநூலில் நாம்