யாழ்ப்பாணத்தில் இரட்டிப்பான போதைப் பொருள் பாவனை

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை இவ்வருடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று யாழ். போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுவதால் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் போதைப்பொருள்களைப் பாவிப்போரின் எண்ணிக்கை இரு மடங்காகி உள்ளது.

வெளிப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில், யாழ். சிறைச்சாலையில் 10 பெண்கள் உட்பட 491 பேர் போதைப்பொருள் பாவனையாளர்களாக இருப்பதாகவும் மருத்துவ கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் 13 பெண்கள் உட்பட 854 பேர் போதைப்பொருள் பாவனையாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் இதுவரை 10 பேர் போதைப் பாவனையால் உயிரிழந்துள்ளனர் எனவும் யாழ்.போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்