
யாழ்.மாவட்டத்தில் தற்போதுவரை 21,884 குடும்பங்களை சேர்ந்த 72,410 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இதுவரை இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை 6 நபர்கள் காயமடைந்துள்ளதாக ரீ.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 42 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 111 குடும்பங்களை சேர்ந்த 3841 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 66 வீடுகள் முழுமையாகவும், 2,886 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.