யாழில் இந்தியாவின் 74ஆவது குடியரசுதின நிகழ்வுகள்

இந்தியாவின் 74ஆவது குடியரசுதின நிகழ்வுகள் யாழ்பாணத்தில் அமைந்துள்ள
இந்திய துணைத்தூதரகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றது.

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து
இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய தேசியக் கொடியை
ஏற்றி வைத்தார்.

இந்திய குடியரசு தலைவருடைய சிறப்புரையை இந்தியத் துணைத்தூவர் வாசித்தார்.

அதைத் தொடர்ந்து குடியரசு தின சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வில்
தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்