
பொலிஸ் அதிகாரிகள் முறைப்பாடுகளை விசாரிக்கும் போது பின்பற்றும் முறைமை
ஒன்றை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம்
பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி
ஒருவர் தமது சேவை வழங்குநர் சார்பில் ஆஜராவதற்கு சென்றிருந்த போது,
அவருக்கு அச்சுறுத்தல் விடுத்து அவரின் சேவை வழங்குநர் சார்பில் ஆஜராக
இடமளிக்காமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு ஒன்று
தொடர்பில் இடைக்கால உத்தரவினை பிறப்பிக்கும் வகையில் உயர் நீதிமன்றம்
இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.