
நாட்டிலுள்ள அனைத்து முன்னாள் போராளிகளையும் ஒன்றினைத்து செயற்படுவதற்காகமுன்னாள் போராளிகள் நலன்புரி சங்க அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வுவவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்,ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா, யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன்,சரவணபவன் , செ. மயூரன் , சிரேஸ்ட விரிவுரையாளர் பரந்தாமன் மற்றும்முன்னாள் போராளிகள் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த அங்குரார்ப்பண நிகழ்வில் முன்னாள் போராளிகள் ஒன்றினைவதில் உள்ளசட்ட சிக்கல்கள், அரசியல் பிரவேசம், தற்போது அங்கம் வசிக்கும் தமிழ்கட்சிகளின் நிலமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில்கலந்துரையாடப்பட்டது.