முன்னாள் அமைச்சர் நாமலுக்கு புதிய பொறுப்புகள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த விடையத்தை வலியுறுத்தியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாமல் ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் கட்சி கூட்டங்கள் இடம்பெறவுள்ளதோடு பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் அரசியல் தரப்பினரை மீண்டும் ஒன்றிணைக்கும் முன்னெடுப்புக்களை பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்