
தமிழில் வெளிவந்த பிரியசகி எனும் படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார் நடிகை நீலிமா ராணி. இதன்பின் பல முன்னணி கதாநாயகர்களின் படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்து வந்தார்.
இதனை தொடர்ந்து கார்த்தி நடித்து வெளிவந்த ‘நான் மகான் அல்ல’ என்ற படத்தில் மூலமாக தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல ரீச் கிடைத்தது.
வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொடர்களை நடித்து வந்தார் நடிகை நீலிமா.
ஆம் செல்லமே, தென்றல், வாணி ராணி, தாமரை போன்ற பல தொடர்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை கொண்டு ஓடி கொண்டிருக்கும் சீரியல் அரண்மனைக்கிளி.
இத்தொடரில் மிக சிறந்த கதாபத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை நீலிமா. ஆனால் தற்போது தனது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சீரியலில் இருந்து விலகப்போவதாக அதிரடியாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவு இவரது ரசிகர்களுக்கு மிகவும் ஆதிர்ச்சியை அளித்துள்ளது என்று தான் கூறவேண்டும்.