
முட்டைகளை இறக்குமதி செய்யும் போது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கட்டாயம் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
முட்டையை இறக்குமதி செய்ய அரசு எடுத்த முடிவுடன் எடுக்கப்பட்ட விலைமனுக்களுக்கு முன் வந்த சர்வதேச விநியோகஸ்தர்களில் 90 சதவீதம் பேர் இந்திய விநியோகஸ்தராவர்.
முட்டைகளை இறக்குமதி செய்வதில் பிரச்சினை இல்லையென்றாலும் இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை அனுமதிக்க முடியாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நாட்டிலிருந்தும் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நாடு பறவைக் காய்ச்சல் இல்லாத நாடாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், அண்மைக்காலமாக இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நாயகத்துக்கு தேவையான பரிந்துரைகளை வழங்க முடியாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எனினும், முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கட்டாயம் என்பதால், அதற்கான அனுமதியை வழங்குவதற்கு வர்த்தக அமைச்சின் தொழில்நுட்பக் குழு எழுத்துமூல அனுமதியை ஏற்கனவே கோரியுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார்.