
கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மரணங்களும், லட்சக்கணக்கில் நோய் தொற்று பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவிலும் இதன் தாக்கம் எழுந்துள்ளது. மக்களை காக்கும் நோக்கில் இந்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. இதன் நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது.
சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களும் மூடப்பட்டிவிட்டன. இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தான் மீண்டும் குழந்தை பருவத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதில் அவர் ராமாயணம், மகாபாரதம் சீரியலை மீண்டும் அரசு தொலைக்காட்சியில் பார்ப்பதே என்னுடைய தினசரி வேலை, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதில் மகிழ்ச்சி, இந்திய புராணங்களை குழந்தைகள் கற்றுக்கொள்ள சிறந்த வழி என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.