
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம்.
அண்மையில் வெளிவந்த டகால்டி திரைப்படம் கூட எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை சந்தானத்திற்கு தரவில்லை என்று தான் கூற வேண்டும்.
மேலும் பல வருடங்களாக இவரின் சர்வர் சுந்தரம் படம் வெளிவருவது தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இப்படம் வரும் காதலர் தினத்தன்று 14ஆம் தேதி வெளிவரும் என்று பட குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது இப்படம் மீண்டும் தள்ளி போய் வரும் இம் மாதம் 21ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சந்தானத்தின் ரசிகர்களுக்கு மீண்டும் சோகத்தை தந்துள்ளது என்று தான் கூறவேண்டும்.