மாங்குளத்தில் குடும்பஸ்தர் கொடூர கொலை! பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் வெளியான தகவல்!

மாங்குளம் பாலைப்பாணி பிரதேசத்தில் கிளிநொச்சியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாங்குளம் பாலைப்பாணி எனும் பிரதேசத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள குளமொன்றுக்கு அருகிலிருந்து இன்று அதிகாலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி உதயநகர் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான ஜெயா என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் உள்நாட்டு துப்பாக்கி மூலமே குறித்த நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முகநூலில் நாம்