
கடந்த மே மாதம் இலங்கையில் இடம்பெற்ற பொது அமைதியின்மையின் போதுகொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரலவுக்காகதற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களால் 09 மில்லியன் ரூபா நன்கொடையாகவழங்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (14) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்மறைந்த பாராளுமன்ற உறுப்பினரின் மனைவியிடம் நன்கொடையைக் கையளித்தார்.பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஆளும் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தின்போதே பணக் காசோலையை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.இந்த நிகழ்வின் போது பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டனர்.மொத்தம் 183 பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்கொடைக்கு பங்களித்துள்ளனர்.