
நாட்டு மக்கள் ராஜபக்சவை விரும்பினால், ராஜபக்சவே நாட்டை தொடர்ந்து ஆட்சி
செய்வார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்
தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு
செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி
அலுவலகத்தில் இடம்பெற்றது, அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிக இளைஞர் பிரதிநிதித்துவத்தை
முன்வைக்க தாம் நம்புவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை
உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றும் என்றும் அவர் மேலும் கூறினார்.