போதைப்பொருள் பாவனையில் முதலிடம் வடக்கு மாகாணம்

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிற்கும் 23 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களே எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் அதிக போதைப்பாவனைக்கு உள்ளானவர்கள் வாழும் கிராமமாக சுமார் 20 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.

எனவே யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துச் செல்­லும் இந்­தப் போதைப் பொருள் பாவ­னை­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வதற்­கான முறை­யான வேலைத் திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சி­யல் தலை­வர்­கள், மதத் தலை­வர்­கள், சிவில் சமூ­கத்­தி­னர் முன்­வ­ர­வேண்­டும் என சமூக ஆர்­வ­லர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­மையும் குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்