
குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று முன்தினம் (13) இரவு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலை செய்த நபர் அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தொடர்பான நீதவான் மரண விசாரணை நேற்று (14) நடைபெற்றதுடன் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.