பொதுமக்களிடம் சுகதார அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதால், மக்கள் பொறுப்புடனும் அவதானத்துடனும் செயற்படவேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய கொரோனா தொற்றை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா பொலிஸ் உடக பேச்சாளர் அஜித்ரோகன, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது சுகாதார அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் சந்திப்பில் கலந்துகொண்ட இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேசந்திர சில்வா தெரிவிக்கையில்,

இந்தியாவில் யாத்திரையை மேற்கொண்டு நாடு திரும்பும் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும் என்றும்,அந்தவகையில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் இதுவரையில் 1,500 பேர் நாடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அவர்கள் தொடர்பான விபரங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், சுயமாக தானிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அவர்களுக்கு அறிவுறத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்