
துறைமுக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு கொழும்பு
துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (23) மதிய உணவு
வேளையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப்
போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், இதன் காரணமாக அருகில் உள்ள வீதிகளில்
கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.