புதிய கூட்டணி குத்துவிளக்கு சின்னத்தில் போட்டி

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக
போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில்
கைச்சாத்திட்டுள்ளன.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற
கட்சிகளின் தலைவர்களால் எட்டப்பட்ட முடிவுக்கமைய ஒப்பந்தம்
கைச்சாத்தானது.

அதன்படி எதிர்வரும் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எனும் பெயரில்
குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் புளொட் சார்பாக த.சித்தார்த்தனும் ரெலோ சார்பாக செல்வம்
அடைக்கலநாதனும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ்
தேசிய கட்சி சார்பாக என்.ஸ்ரீகாந்தாவும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக
வேந்தனும் கையெழுத்திட்டனர்.

சின்னம் தொடர்பாக ஏற்பட்ட இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ்
மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் நேற்றைய
கூட்டத்திலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்