புங்குடுதீவை சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நால்வர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக
தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

இதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) தனுஷ்கோடி அருகே உள்ள ஒத்தப்பட்டி தெற்கு
கடற்கரைக்கு நள்ளிரவு சென்றடைந்து, கடற்கரை அருகே உள்ள மீனவர் குடிசையில்
தஞ்சமடைந்தனர்.

இதற்கமைய புங்குடுதீவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரே
இலங்கையில் இருந்து இவ்வாறு சென்றுள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்து ஒத்தப்படடிக்கு சென்ற தனுஷ்கோடி காவல் நிலைய
பொலிஸார் மற்றும் க்யூ பிரிவு பொலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

மேலும் கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையிலிருந்து சென்ற அகதிகளின்
எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்