
UNESCO தலைமையகத்தில் நடைபெறவுள்ள கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (28) காலை பிரான்ஸ் சென்றுள்ளார்.
இந்த மாநாடு நாளை வரை நடைபெறவுள்ளது.
கொரோனா தொற்றால் பாடசாலைக் கல்வியை இழந்த உலகின் பல நாடுகளில் உள்ள மாணவர்களின் நிலையான வளர்ச்சி இலக்குகளை உயர்த்துதல், தரமான கல்விக்கான நடவடிக்கைகளை எடுத்தல், கல்வி மறுசீரமைப்பு என்பன தொடர்பில் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.