
குருணாகலில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பம் ஒன்று படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தாய், தந்தை, மகன், மகள், சாரதி மற்றும் பயண வழிகாட்டியும் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீகிரிய சுற்றுலா ஹோட்டல் நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த குடும்பமே விபத்தில் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.