பாராளுமன்றத்தின் நடுவில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினர் திலிப்
வெதராச்சி  பாராளுமன்றத்தின் நடுவில் தரையில் அமர்ந்து போராட்டம் ஒன்றை
நடத்தினார்.

வரவு செலவுத் திட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத்
தீர்வு காணுமாறு கோரியே அவர் இந்தப் போராட்டத்தை நடத்தினார்.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் தனது உரையை நிகழ்த்திய
பின், சட்டசபை அரங்கின் நடுவே வந்து தரையில் அமர்ந்து தனது எதிர்ப்பை
தெரிவித்தார்.

பல நாள் படகுகள் பல நாட்களாக கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதாகவும்,
நியாயமான விலை கிடைக்காமல் மீனவர்கள் பரிதவிக்கும் நிலை
ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்