பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை – கல்வி அமைச்சர்

பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை காணப்படுவதாக கல்வி
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டார்.

11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு நடவடிக்கை
எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது ஒரு பகுதியினருக்கு மாத்திரமே மதிய உணவை வழங்குவதாகவும்  அதனை
இரட்டிப்பாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்