பாகிஸ்தானில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு வெள்ளை மாளிகை இரங்கல்

பாகிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வெள்ளை மாளிகை இரங்கல் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 

இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 இலட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். 

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.

பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் விளைவாக பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை மந்திரி ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

மேலும், பாகிஸ்தான் மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்