
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் 05 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட ஏ குழு போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பங்களாதேஷ் 5 – 1 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இலங்கை அணியில் இடம்பெறும் கிண்ணியா அல் அமீன் வித்தியாலயம் கோல் காப்பாளர் மொஹமத் ரிஹாஸ் இந்தப் போட்டியில் எதிரணியினரின் பல கோல் போடும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி இராவிட்டால் பங்களாதேஷின் கோல் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு டசின்களாக உயர்ந்திருக்கும்.
