
பங்களாதேஷின் Chittagong நகரிலுள்ள கொள்கலன் களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய வெடிச் சம்பவத்தில் குறைந்தது 424 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்ட நிலையிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்த சில கொள்கலன்களில் இரசாயனங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக நம்பப்படுகின்றது.